12 டிசம்பர் 2008, வெள்ளிக்கிழமை

வணக்கம்!

தமிழக நடிகர்களின் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம் தொடர்பாக கட்டுரை ஒன்றை மீள் பிரசுரம் செய்திருந்தோம. அதனால் நாங்கள் அவர்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட்டதாக, பலர் அதிருப்தி தெரிவிச்சு வருகிறார்கள்;. தமிழக நடிகர்களையோ, நடிகைகளையோ அவமதிக்கும் எண்ணம் எங்களிட்டை கொஞ்சமும் இல்லை. கடவுள் எப்பிடியிருப்பார் எண்டே எங்களுக்கு காட்டினவையளை நாங்கள் அவ்வளவு சீப்பா நினைக்கேல்லை. வீக்கென்டுகளிலை நிகழ்ச்சி வைக்கவே எங்களிட்டை சொந்தமா சரக்கு இல்லை. இதுக்கிள்ளை அவையளை விட்டா எங்களுக்கு வேறை என்ன பொழுது போக்கு இருக்கு?

மச்சான்

2004ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ம் திகதி பிபிசி இணைய தளத்தில் காணப்பட்ட செய்தித் தலைப்பு ஒன்று “சிறிலங்கா கைப்பந்துக் குழுவினர் தலைமறைவு” (Sri Lanka Handball Team Vanishes ) என்பதாக இருந்தது. கைப்பந்து (கரப்பந்து அல்ல) என்றால் என்ன என்றே தெரியாத என்போன்றோருக்கு இது வியப்பைத்தரும் புதினமாக இருந்தது. கைப்பந்து பற்றி அறிய, கூகுலில் தேடியதில், அனைத்துலக கைப்பந்து அமைப்பின் இணையத்தளத்தின்படி, இவ்விளையாட்டானது உரோமானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தலா ஏழுபேர் கொண்ட இரண்டு அணிகளுக்கிடையிலான பந்து விளையாட்டு. 

அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்!

சர்வதேசப் பயங்கரவாதம், இனவழிப்பு ஆகியவற்றை கையாளும் விடயத்தில், மேற்கு நாடுகளும் அதனுடன் அணி சேர்ந்திருக்கும் மற்றய நாடுகளும், ஒத்தகருத்துடன் செயற்பட்டு வருகின்றன. அவை ஆயுதம் ஏந்திப்போராடும் அரசுகள் சாராத அனைத்து அமைப்புக்களையும் பயங்கரவாத அமைப்புகளாக வகைப்படுத்தி வருகின்றன.

சொந்த நாட்டு மக்களின் மனிதவுரிமைகளினை மீறும் அல்லது இனவழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அரசுகள் மீது பொருளாதார அழுத்தத்தினைப் பிரயோகிப்பதிலும், மிகுந்த தயக்கம் காட்டப்படுகிறது. சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டு வருகிற GSP plus எனும் ஏற்றுமதி வரிச்சலுகையை நிறுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கைக்கொண்டுவரும் அணுகுமுறையிலிருந்து இதனை தெரிந்து கொள்ளலாம்.





 











Syndicate content