மே 9, வெள்ளிக்கிழமை

வணக்கம்!

முன்னமே சொன்னமாதிரி இந்தப் பேப்பர் மாதத்தின் இரண்டாவது வெள்ளியன்று வெளிவருகிறது. மற்றயபடி உங்களை சிலர் பயப்படுத்தியது மாதிரி எங்களை யாரும் அள்ளிக் கொண்டு போகவில்லை.

எங்களது பணிமனை அமைந்துள்ள கட்டிடத்தொகுதி பிரித்தானிய உள்ளக காவல்துறையினரின் தேடுதலுக்கு உள்ளானது உண்மைதான். இருந்தாலும் அது எமது பத்திரிகையின் நடவடிக்கை சம்பந்தப்பட்டதோ அல்லது ஒரு பேப்பர்காரன்கள் காரிகள் சம்பந்தப்பட்டதோ இல்லை என்பதை சொல்லி வைக்க விரும்புகிறோம். எல்லாம் உள்ளது உள்ளபடியே இருக்கின்றது என்பதையும் சொல்லவேணும்.

சண்டியர்கள்

by:
சாத்திரி

அண்மையில் முகத்தார்ஜேசுரட்ணம் அவர்களின் ஒலிநாடா வடிவில் இருந்த சில நாடகங்களை இறுவட்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்.அப்பொழுது�

காலக்கரைதலைப் பதிவாக்கும் ஊடகத்தாரின் ஒன்று கூடல்

by:
இதயச்சந்திரன்

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு, கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 26ஆம் திகதி இலண்டனில் நடாத்தப்பட்டது.

ரேச்சல் கோகன்

சம்பிரதாய பூர்வ மங்கள விளக்கேற்றலுடன், உயிர்நீத்த ஊடகவியலாளர்கள் மற்றும் கொல்லப்பட்ட மக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

இம்மாநாட்டினை ஓழுங்கமைத்த ~ஒரு பேப்பர்| ஆசிரியரும், ஒன்றியத்தின் பிரதிநிதியுமான திரு. கோபி இரத்தினத்தின் வரவேற்புரையினை அடுத்து திரு. ஐவன் பேதுருபிள்ளையின் தலைமையில் முதல் அமர்வு தொடங்கியது.

உலகின் பலபாகங்களிலுமிருந்து ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தாலும், தாயக விடுதலைக்காகத் தமது பங்களிப்பினை வழங்கிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் பலர் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

அபூர்வமான அனுபவம் அடைந்தேன்.

by:
இரவி அருணாசலம்

நெஞ்சார ஒன்று சொல்கிறேன். சென்ற ஞாயிறு (4-5-08) நடந்த ஒரு நிகழ்வு, என்வாழ்வில் நேர்ந்த மிக அபூர்வமான தருணங்களில் ஒன்று. நெஞ்சு இனிக்க அந்த நாள் என்னில் பதிந்தது. “ஒரு பேப்பர்” இல் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிற வி.சபேசன் (ஜேர்மனி) அவர்கள் கலைநிதியை வதுவை புரிந்த அந்தத் தருணத்தையே மிக்க அபூர்வமான தருணம் என நான் குறிப்பிட்டேன்.

சனிக்கிழமை (3-5-08) காலையில் நாதன் அவர்களின் மகிழ்வுந்தில், கோபி, பார்த்தி, இளங்கோ, நாதன்,  நான் என ஒருபேப்பர்காரன்கள் புறப்பட்டோம். மணிவாசகனை விட்டுப் போவது வருத்தமாக இருந்தது.

பிரகாசமான காலை வெய்யிலில் தெளிவான தார்ப் பாதையில் பயணம் குதுகலத்துடன் அமைந்தது. அரசியல், சினிமா என்று அளவளாவியதில் எட்டுமணிப் பயணம் சோர்வைத் தரவில்லை என்று சொல்லக் கூடாது. இன்பகரமாய் இருந்தது. அப்படித்தான் சொல்ல வேண்டும்.

அமுல் பேபியும், புவி அரசியலும்

by:
அநபாயன்

தமிழர்களுக்கு எதிரானதாக ஏன் கருதுகிறீர்கள்? அது வணிகரீதியானதாக கூட இருக்கலாமே”.

இலங்கை அரசுக்கு இந்திய அரசு வழங்கும் ஆயுத மற்றும் கடன் உதவிகள் பற்றி நடிகர் விஜயகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது. “புரட்சிக்கலைஞர்" வழங்கிய பதிலிது.

Vijayakanthஇத்தோடு நிற்காமல். “வருங்கால தமிழக முதல்வர்” புவிசார் அரசியல் (Geo politics) தொடர்பான தனது “மேதமையை” மேலும் வெளிப்படுத்தினார். அதாவது சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையுடன் ஒட்டி உறவாடுவதைத் தடுக்கவே இவ்வாறான உதவிகள் வழங்கப்படுகின்றனவாம்! இச்செய்தியை பி.பி.சி. நிறுவனம் தனது தமிழ், சிங்கள சேவைகளில் குருரமான புளங்காகிதத்துடன் “போட்டுத் தாக்கியிருக்கின்றது”.

கிழக்கு பறிபோய்விடும் அபாயம்

நாளை நடைபெறவிருக்கும் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல், அப்பிரதேசத்தில் சுமூக நிலையை மீளக்கொண்டுவரும் எனவும், இனி அங்கு சனநாயகமுறையிலான ஆட்சி அலகுகள் செயற்படத் தொடங்கும் எனவும் சிறிலங்கா அரசு பரப்புரை செய்து வருகின்றது. மனிதவுரிமை மீறல்கள் உச்ச நிலையை அடைந்துள்ள நிலையில், அனைத்துலகப் பரப்பில் ஒரளவு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சிறிலங்காவுக்கு இத்தகைய பிரச்சாரம் அவசியமாக உள்ளது. ஆனால் கிழக்கின் உண்மை நிலையை புரிந்து கொண்டவர்களுக்கு இப் பிரச்சாரங்களில் மறைந்திருக்கும் அபாயத்தை பகுத்தறிந்து கொள்வதில் சிரமமேதும் இருக்காது.

Elections in the East… So What?

On May 10th the Government of Sri Lanka (GOSL) will conduct an election for the Eastern Provincial Council. It is investing its last political rupees in this gamble hence working hard to win it by any means.

The opposition especially the United National Party complains bitterly about intimidation and violence against them. UNP parliamentarian Laxman Kiriyelle has accused the paramilitaries for involvement in distributing blank polling cards and warned that the GOSL is preparing for a large scale election rigging.

In an interview with a state-run television station, Gotabhaya Rajapaksa, President Mahinda Rajapaksa’s younger brother and the Defence Secretary has called on the government to ban independent media that publish “harmful” stories. He has described journalists who criticise the war effort as traitors.

The Army Commander has also called people who criticise the military as traitors.

Tamil people in the East are living in fear of intimidation and threat says Campaign for Free and Fair Election (CAFFE), a civil society organisation.

In the meantime President Rajapakse has suspended Parliament sessions for a month.

This is how the current affairs in Sri Lanka is unfolding.

While the world is anxiously looking for solutions for the “silent tsunami” of food crisis, the ruling elite in Sri Lanka threatens and intimidates journalists, civilians and opposition parties.

Pathetic isn’t it?

Tamil East used to be the rice bowl of Sri Lanka. Tamils used to be the majority now they are in the minority.





 











Syndicate content