பேப்பர் 009

கலை வளர்ச்சியா? அல்லது கால விரயமா?

பிரித்தானியாவில் வாழும் தமிழ்ப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வீணை, வயலின், மிருதங்கம், கீபோர்ட், வாய்பாட்டு, பரதநாட்டியம் என்று பல்வேறுபட்ட கலைகளையும்  பயிற்;றுவிக்கிறார்கள். சனி, ஞாயிறு தினங்களில் தங்களால் காவமுடியாத பெரிய வாத்தியக் கருவிகளுடன் சிறுவர் சிறுமிகள் தமிழ்ப் பாடசாலைகளுக்கு செல்வதைக் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் காணலாம்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக அதிகளவு தமிழ் கலைநிகழ்ச்சிகள் லண்டனில்தான் நடைபெறுகிறது, எனச்சிலர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். லண்டன் பல்கலைக்கழகத்தின் லோகன் மண்டபமும், ஹேய்ஸ் நகரில் உள்ள பெக் தியேட்டரும்; தமிழ் நிகழ்ச்சிகளுக்காக முன்கூட்டியே பதிவுசெய்து ஒதுக்கப்படுவதாகவும் அறியக்கிடைக்கிறது.

எதிர்நீச்சல்

இம்மாதம் 3ம் திகதிவரை நடைபெற்று வந்த 48வது லண்டன் திரைப்படவிழாவில் காண்பிக்கப்பட்ட ஒரு சிஙகளத் திரைப்படம் “உடுகன் யாமய” (Against the Tide) அல்லது “எதிர்நீச்சல்” எனத் தமிழில் அர்த்தம் கொள்ளலாம்.

1989 ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ஜே.வி.பியின் வன்முறை நடவடிக்கை களுக்கும், அவற்றுக்கு எதிராக சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்துக்கும் இடையில் சிக்கி, சாகடிக்கப்பட்ட அல்லது காணமற்போன அறுபது ஆயிரம் சிங்கள இளைஞர்களையும், அதனால் ஏற்பட்ட மனித அவலங்களையும் மையப்படுத்தி இந்தக்கதை சொல்லப்படுகிறது.





 











Syndicate content