தமிழீழப் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்தக் குரல்கள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளன. இதுவரை ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் பாராமுகமாக இருந்த கட்சிகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பத் தொடங்கியிருப்பது இதில் ஒரு முக்கியமான விடயம். தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திரும்பியுள்ளதை இது எடுத்துக் காட்டுகின்றது.
கடந்த ஒரு பேப்பரில் வெளிவந்த எனது “குறிவைக்கப்படும் ஈழத்தமிழர்களும், மேடைக்கு அலையும் புத்திஜீவிகளும்” என்ற கட்டுரையில் மலேசியாவில் நடைபெற்ற மாநாடு பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இம்மாநாட்டில் தான் கலந்து கொண்டமை தொடர்பாக பேராசியர் செல்வா செல்வநாதன் “ஒரு பேப்பர்” க்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். மேற்படி மாநாட்டில் அவர் தனது சொந்தச் செலவில் கலந்து கொண்டதாகவும், அங்கு தன்னால் முடிந்தவரையில் தமிழர் பக்க நியாயங்களை விளக்கியதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஈழம் என்ற வார்த்தையும், அது குறித்து நிற்கும் அங்கீகரிக்கப்படாத ஒரு புவியியல் அலகு தொடர்பான பதிவுகளும் இணைய தளப் பக்கங்களை நிறைத்துக் காணப்படுவது, கல்வியாளர் சிலருக்கு அதனை ஒரு ஆய்வுப்பொருளாக ஆக்கியுள்ளது. இவ்விடயத்தினை ஆய்வு செய்த ஒரு சிங்களக் கல்வியாளர், இல்லாத ஒரு தேசத்திற்கு இவ்விதம் மாயத்தோற்றம் கொடுக்கப்படுவது புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரின் இயலாத்தனத்தின் வெளிப்பாடு எனக்குறிப்பிட்டிருக்கிறார். வேறு சில கல்வியாளர்களோ, இது விடுதலைப்புலிகளினதும் அவர்களது ஆதரவாளர்களினதும் பிரச்சாரம் என்கிறார்கள்;.
உலகையே நடுங்க வைத்த சர்வாதிகாரி ஹிட்லரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஜேர்மனியின் சர்வாதிகாரியாக 1934இல் இருந்து 1945 வரை ஆட்சி புரிந்த ஹிட்லர் நடத்திய அழிவுகள் எண்ணில் அடங்காதவை. ஹிட்லர் உருவாக்கிய இரண்டாம் உலக யுத்தத்தில் ஐரோப்பாவில் மட்டும் 39 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.
ஹிட்லரின் நாசிப் படைகள் செய்த படுகொலைகள் மனிதகுலத்தை இன்று வரை நடுங்கச் செய்பவை. எக் குற்றமும் செய்யாத 6 மில்லயனுக்கும் அதிகமான யூத மக்கள் ஹிட்லரின் படைகளால் கொல்லப்பட்டார்கள். யூதர்களை கொல்வதற்கு என்றே உருவாக்கப்பட்ட பிரத்தியேக முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட யூத மக்கள் அங்கு பல விதமான சித்திரவதைகளின் ஊடாக கொல்லப்பட்டார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமேயே கொலை செய்யப்பட்டு பிணமாகிப் போய்விட்ட புரிந்துணர்வு ஒப்பந்ததம் தற்பொழுது மகிந்தவின் அரசு அடக்கமும் செய்யப்பட்டு விட்டது. கொலை செய்ததும் சிங்கள அரசுதான். அடக்கம் செய்ததும் சிங்கள அரசுதான்.
விடுதலைப் புலிகள்தான் முதலில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறினார்கள் என்றும், அதிகளவிலான யுத்தநிறுத்த மீறல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டார்கள் என்றும் சிறிலங்கா அரசும், அதனுடைய ஒட்டுக் குழுக்களும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆனால் இது எந்த வகையிலும் உண்மை இல்லை.
மேற்படி தங்களது கருத்துகளுக்கு பதில்தரும் நோக்குடன் தரப்பட்டுள்ள இக்கடிதத்தை பத்திரிகை-தர்மத்துக்கு இணங்க தங்களது பத்திரிகையில் எதுவித மாற்றங்களையும் செய்யாது பிரசுரிப்பீகள் என்பதில் எமக்கு நம்பிக்கை. மேலே எமது தாழ்மையான கருத்துகள்.
அண்மைக்காலமாக செய்தி ஊடகங்கள் மூலமாக திணிக்கப்படும் ஒரு கருத்து, தமிழ் மக்களிற்கான தலைமையை தேசியத்தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஏற்றிருக்கும்வரை இலங்கைத்தீவில் அமைதி ஏற்படப்போவதில்லை என்பது. இந்தக் கருத்துக்களை பரப்புவர்களின் பட்டியலில், சிறிலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, கோத்தபாய இராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா முதல் கொணடு இந்திய இராணுவ அரசியல் ஆய்வாளர்கள், அவர்களுக்க வால் பிடிப்பவர்கள் என பலரும் அடங்குவர். இவர்களது அபிலாசைகள் வெவ்வேறாக இருந்தாலும் தத்தம் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் இவர்களுக்கு தமிழர் தலைமை முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.
"பிரஜை ஒவ்வொருவரும் அவர் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்பது ஐயத்துக்கு அப்பால் நிரூபிக்கப்படும்வரை அப்பாவியாகவே கருதப்படவேண்டும்' என்பதுதான் பொதுவான சட்டவிதி; ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமை; இயற்கை நீதி.
ஆனால் தலைநகர் கொழும்பிலும் புற நகரங்களிலும் தமிழர்கள் என்பதற்காகவே ஆயிரக்கணக்கில் ஆட்கள் கைது செய்யப்படுவதையும், அரசு "பயங்கரவாதிகள்' எனக் குறிப்பிடும் விடுதலைப் புலிகளுக்கும் இவ்வாறு கைது செய்யப்படுவோருக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை இவ்வாறு கைது செய்யப்படுவோர் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதையும் நோக்கும்போது தமிழர் விவகாரத்தில் மட்டும் மேற்படி இயற்கை நீதி மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகின்றது.
பண்டாரவன்னியன் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு - கிட்டத்தட்ட நானூறு
ஆண்டுகளுக்குப் பிறகு - வன்னி நிலப்பரப்பானது தமிழர்களின் ஆளுகைக்குள்,
கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இருந்து வருகின்றது.
ஆனாலும் வன்னியை ஒரு நாடாக தமிழர்கள் கூட கூறுவது குறைவாகவே உள்ளது. இது ஏன்?
நானூறு ஆண்டுகளுக்குள் உலக நடைமுறையும் மிகப் பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளதுவே
இதற்கான காரணமாகும். அதாவது, இன்றைய உலக ஒழுங்கில் ஒரு நாடு, நாடாகக்
கொள்ளப்படுவதற்கு அது மற்றைய நாடுகளினால் அங்கீகரிக்கப்படுவது அவசியமாகிறது.
தணிந்துபோயிருந்த கருணா விவகாரம், அவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் சுடு பிடித்துள்து. முன்னர் கருணாவை கிழக்கின் விடிவெள்ளியாகப் பார்த்த ஊடகப் பண்டிதர்களெல்லாம், இப்போது அது திடிரென பட்டுப்போனதைப் பற்றிப் பேசுகிறார்கள். அதற்கு காரணமானவர்களைப் பற்றியும் எழுதுகிறார்கள். கருணாவை, சிறிது காலத்துக்கு மட்டும் தோன்றி சந்தடியில்லாமல் மறைந்து போகும் வால்வெள்ளி போல் பார்த்த பெரும்பான்மையான தமிழ்மக்ளைப் பற்றி யாரும் கவனத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை. அவர்களது ஆதரவில்லாமல் எத்தனை நாளைக்குத்தான் கருணா தன் கூத்தினை நடாத்த முடியம்?
தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களுடைய வீரச்சாவு உலகத் தமிழர்களின் மனங்களில் பெரும் வலியினை உருவாக்கி விட்டது. அனுராதபுர வான்தளத்தினை விடுதலைப் புலிகள் தகர்த்து அழித்த வெற்றிச் செய்தியினால், பெரும் உவகையோடு இருந்த தமிழ் மக்கள் இடிந்து போய் இருக்கிறார்கள்.
அனுராதபுர வான் தள அழிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அதற்காக தமது இன்னுயிர்களை ஈந்தளித்த கரும்புலிகளின் வீரச் சாவும், அக் கரும்புலிகளின் புகழுடல்களை அவமானப் படுத்த முனைந்த சிங்கள அரசின் ஈனச் செயலும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்கனவே சோகத்தை படரச் செய்திருந்தது. இந்த நேரத்தில் பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்கள் வீரச் சாவடைந்தார் என்ற செய்தி எல்லோரையும் ஒரு முறை உலுப்பி விட்டது.
கருணா மீண்டும் ஓடிவிட்டதாக செய்திகள் வருகின்றன. கருணா அடிக்கடி ஓடுவதால் எங்களுடைய ஊடகங்களுக்கும் சலிப்பு வந்து விட்டது. கருணா இம் முறை ஓடியதைப் பற்றி யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு சிறிய செய்தியாக மட்டுமே வெளியிட்டிருந்தார்கள். மக்களும் பெரிதாக அதுபற்றி அக்கறை செலுத்தவில்லை.
இம் முறை கருணாவை "கருணா குழுவில்" இருந்தே இடைநீக்கம் செய்து விட்டதாக சொல்லப்படுவதுதான் கருணாவின் ஓட்டத்தில் உள்ள ஒரு புதிய விடயம். இது பற்றி பலவாறு கூறுப்படுகிறது. கருணா உண்மையிலேயே நீக்கப்பட்டுவிட்டதாக ஒரு தரப்பினரும், சர்வதேசத்தை அமைதிப்படுத்துவதற்கு நடக்கும் ஒரு நாடகம் என்று தரப்பினரும் கருத்துக் கூறுகிறார்கள்.
நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 62வது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத் தொடரினை ஒட்டி விடுதலைப் புலிகள் ஐக்கியநாடுகள் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் இறைமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே விடுதலைப் புலிகளால் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் "இறைமை" பற்றி சற்று ஆராய்தல் பொருத்தமாக இருக்கும். தமிழீழம் என்கின்ற தனியரசு எவ்வாறு உருவாகும், எந்த நாடுகளும் அங்கீகரிக்காத போது அது எப்படிச் சாத்தியமாகும் போன்ற கேள்விகளும் பலரிடம் உள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை புரிந்து கொள்வதற்கும் "இறைமை" பற்றி புரிந்து கொள்வது அவசியம்.
முன்னர் வீரகேசரி பத்திரிகையில் செய்தியாளராய் பணிபுரிந்த டேவிட் ஜெயராஜ் என்பவர் தற்போது ரொறொன்ரோ நகரில் வசிக்கிறார். தொலைபேசி வாயிலாகவும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலமும் கிடைக்கப்பெறும் செய்திகளை வைத்துக்கொண்டு ஏற்கனவே தான் சேர்த்து வைத்திருக்கும் சில தகவல்களையும் சேர்த்து இலங்கைத்தீவில் நடைபெறும் விவகாரங்கள் பற்றி அருகிலிருந்து பார்த்ததுமாதிரி ஆங்கிலத்தில் வாராந்தம் எழுதித் தள்ளுகிறார்.
கிழக்கைக் கைப்பற்றிவிட்டதாக சொல்லிக்கொள்ளும் சிறிலங்கா அரசு, வடக்கிலும் மன்னாரின் சிலாபத்துறைப் பகுதியை கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளது. சிலாபத்துறை, அரிப்பு போன்ற பகுதிகளை கடந்த 01.09.07 அன்று சிறிலங்காப் படைகள் சென்றடைந்தன. இதன் மூலம் வடக்கிலும் விடுதலைப் புலிகளின் ஒரு பகுதியை கைப்பற்றி விட்டதாக சிறிலங்கா அரசு தம்பட்டம் அடித்து வருகிறது.
கிழக்கை முற்றுமுழுதாகக் கைப்பற்றி விட்டதாக சிறிலங்கா அரசு சொல்வதிலும் உண்மை இல்லை. வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிலாபத்துறையை கைப்பற்றிவிட்டதாக சொல்வதிலும் உண்மை இல்லை.
Recent comments
2 weeks 14 hours ago
2 weeks 2 days ago
5 weeks 19 hours ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
17 weeks 2 hours ago
17 weeks 3 hours ago
17 weeks 1 day ago
17 weeks 5 days ago