கடந்த ஒரு பேப்பரில் “பிரித்தானிய தமிழர் தேசியப்பேரவை” பற்றிய வரைபு பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதையொட்டிய சில கருத்துகள் எங்களை வந்தடைந்துள்ளன. அவை பற்றி வரும் இதழ்களில் பார்ப்போம். அதுபோல் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஐனநாயக முறையில் வெளிப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டுள்ளதால், இம்முயற்சிகள் ஒருமுகப்படுத்துப்பட வேண்டும் என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்படுகிறது. தமிழ்மக்கள் மத்தியில் இவை பற்றிய முழுமையான கருத்துப்பரிமாற்றம், வெளிப்படையாக நடைபெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் இருந்து வருகிறது. ஏற்கனவே புலத்திலுள்ள தமிழ் தொலைக்காட்சிகள், வானொலிகள், இது விடயமான கருத்தாடல்களுக்கு களம் அமைத்து கொடுத்துவருகின்றன.
கடந்த பல வருடங்களாக இயங்கிவந்த தமிழீழ அரசு நோக்கிய அரசு (de-facto government) சிறிலங்கா ஆட்சியாளர்களால், அதன் துணைநின்ற அரசுகளுடன் இணைந்து அசுரபலம் கொண்டு, நிர்மூலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு நிரப்ப முடியாத வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
விடுலைப்புலிகளினால் நிர்வகிக்கப்பட்டு வந்த அக்கட்டடமைப்பு தனித்து உள்நாட்டில் மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் கிளை பரப்பியிருக்கிறது. இக்கிளை அமைப்புகள் தாயகத்தில் உள்ள தலமைச் செயலகத்துடனும், மற்றய நாடுகளிலுள்ள தம்போன்ற அமைப்புகளுடனும் தொடர்பாடலை நடாத்தி இணைவாகச் செயற்பட்டு வந்தன. அவை நாடுகளின் தூதாராலயங்களை விட நேர்தியாக பணியாற்றி வந்தன என்பதனை சிறிலங்கா அரச தலைவர்களே முன்னர் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
நினைவில்:
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்
(29.07.1967 -02.11.2007)
நேற்றுவரை புன்னகை பூத்தபடி ஊடகவியலாளர்களையும், சர்வதேச இராசதந்திரிகளையும் ஏன் தனது எதிர்தரப்பில் உள்ள சிறிலங்கா அரசியல் தலைவர்களையும் எதிர்கொண்ட, அரசியற்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் கடந்த 2ம் திகதி வெள்ளியன்று காலை சிறிலங்கா வான்படையின் தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.
உண்மையில் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியற் பொறுப்பாளர். ஆனால் எங்களின் பிரதிநிதியாக உலக அரங்கில் செயற்பட்டவர் என்பதனால் அவர் எங்களில் ஒருவராய், ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிநிதியாக எங்கள் உணர்வுகளில் நிறைந்திருக்கிறார். இதன் தாற்பரியத்தை மற்றவர்கள் புரிந்து கொண்டார்களோ இல்லையோ, சிங்கள தேசம் நன்றாகப்புரிந்து கொண்டிதிருந்தது. அதானால்தான், அவர் மரணத்தையிட்டு மகிழ்ந்து ஆரவாரித்தது. இந்த மனிதாபிமானமற்ற செய்கைகள் மூலம் சிங்களம் தன்னை இனங்காட்டிக் கொண்டதுடன், உலகத்தமிழனத்தின் உணர்வுகளை உலுப்பிவிட்டுள்ளது. தமிழ்ச்செல்வன் என்ற தமிழர்களின் புதல்வன் தன் மரணத்தின் மூலமும் தன்னினத்தின் மனக்கதவுகளைத் தட்டிச்சென்றிருக்கிறான்.
ஈழப் புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்) அமைப்பின் தாபகரான திரு. இளையதம்பி இரத்தினசபாபதியை நினைவுகூருமாக மார்ச் 24ம் திகதி; “Sri Lanka at Ethnic Crossroad” எனும் தலைப்பில் மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது.
லண்டன் பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாடு காலையில் திரு. இரவிச்சந்திரா சுந்தரலிங்கத்தின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது.
Recent comments
16 hours 4 min ago
2 days 14 hours ago
4 days 15 hours ago
5 days 8 hours ago
6 days 8 hours ago
1 week 14 hours ago
1 week 1 day ago
1 week 2 days ago
1 week 2 days ago
1 week 3 days ago