இலங்கைத்தீவின் இனப்பிரச்சனை விடயத்தில் வெளிப்படையாகத் தலையிடுவதனை தவிர்த்து வந்த இந்தியா, தனது அணுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய மத்திய அரசின் அதிமுக்கிய அதிகாரிகளான, பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயண், வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங் ஆகியோரின் அண்மைய கொழும்புப் பயணம் அமைந்திருக்கிறது. கொழும்பில் இவர்கள் சிறிலங்கா சனாதிபதி இராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், சிறிலங்கா அரச ஆதரவுத் தமிழ்க் குழுக்கள் எனப் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடாத்தியிருக்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கான தெரிவில் சிறிலங்கா தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. அப்பட்டமான மனிதவுரிமை மீறல்களைப் புரிந்து வரும் சிறிலங்கா அரசு அனைத்துலகப் பரப்பில் ஒரு தவறான உதாரணமாக அமைந்துவிடும் என்பதால், இக்குழுவில் சிறிலங்கா இடம் பெறுவதை பல நாடுகள் விரும்பவில்லை.
நாளை நடைபெறவிருக்கும் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல், அப்பிரதேசத்தில் சுமூக நிலையை மீளக்கொண்டுவரும் எனவும், இனி அங்கு சனநாயகமுறையிலான ஆட்சி அலகுகள் செயற்படத் தொடங்கும் எனவும் சிறிலங்கா அரசு பரப்புரை செய்து வருகின்றது. மனிதவுரிமை மீறல்கள் உச்ச நிலையை அடைந்துள்ள நிலையில், அனைத்துலகப் பரப்பில் ஒரளவு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சிறிலங்காவுக்கு இத்தகைய பிரச்சாரம் அவசியமாக உள்ளது. ஆனால் கிழக்கின் உண்மை நிலையை புரிந்து கொண்டவர்களுக்கு இப் பிரச்சாரங்களில் மறைந்திருக்கும் அபாயத்தை பகுத்தறிந்து கொள்வதில் சிரமமேதும் இருக்காது.
மனிதவுரிமை மீறல்கள் உச்சகட்டத்திலிருக்கும் சிறிலங்காவின் அரசு சர்வதேசமட்டத்தில் தனிமைப்படுத்தபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமது நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பினை சிறிலங்கா சரிவரச் செய்யவில்லை எனக்காரணங்காட்டி, மக்களை பாதுகாக்கும் உரிமை என்ற அடிப்படையில் வெளிநாடுகளின் தலையீடு ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் சிறிலங்கா அரசினை தொற்றிக் கொண்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக கொசோவோ நிலை அங்கு தோன்றி விடுமோ என்ற அச்சத்தை சில சிங்கள அரசியல்வாதிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
விடுதலைப் போராட்ட இயக்கங்களை, அவை வன்முறைகளில் ஈடுபடுகின்றன எனக் குற்றஞ்சாட்டி, அப்போராட்டங்களில் உள்ள நியாயத்தன்மையை சர்வதேச உலகம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. வன்முறையினால் ஏற்படும் மனித அவலங்களை கருத்திற்கொண்டு ஆயுதப்போராட்டங்கள் நாகரீக உலகினால் வெறுக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் பயங்கரவாத அமைப்புகளாக பட்டியலிடப்பட்டுள்ளன. வன்முறையை கைவிட்டு சனநாயக வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அவற்றின் மீது பல்வேறு அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
அண்மையில் தமிழ்நாட்டில் சில ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் ;காரணங்காட்டி, கைதுசெய்யப்பட்டவர்களுக்கு புலி முலாம் பூசி, விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டை தளமாக பாவிக்கத் தொடங்கியுள்ளார்கள் என்ற பிரசாரத்தை இவ்விடயத்தில் அக்கறை கொண்ட சில வட்டாரங்கள் மேற்கொள்கின்றன. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி திரு. கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு சட்;டசபையை கலைத்துவிட தமிழ்நாட்டுத் அரசியல்வாதிகள் சிலர் எத்தனிக்கின்றனர். மீளவும் விடுதலைப்புலிகள் விவகாரத்தை அவர்கள் தங்களது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
யுத்த நிறுத்த ஒப்பந்த்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகிக்கொண்ட சிறிலங்கா அரசு சர்வதேசநாடுகளின் கண்டனங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவசர அவசரமாக சிறிலங்கா அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் தனக்கேற்றவகையில் தீர்வுத்திட்டமொன்றை வெளியிட்டுள்ளது. மாகாணசபைகள் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பதே அந்த தீர்வுத் திட்டத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது.
சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிக்கொண்ட சிலமணிநேரத்திலேயே இலங்கைத்தீவில் உள்ள மக்கள் அழிவுகளை சந்தித்துள்ளார்கள். மொனராகல மாவட்டத்தில் பயணிகள் பேருந்துமீது நடாத்தப்பட்ட தாக்குதலும், நேற்றய தினம் கிளிநொச்சி கனகபுரம் பகுதியிலுள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது நடாத்தப்பட்ட மோசமான விமானக்குண்டுத் தாக்குதல்களும் தீவு எதிர்நோக்கியுள்ள பாரிய மனித அவலத்தை கோடிகாட்டி நிற்கின்றன.
தாங்கள் போரில் வென்று வருகிறோம் என்ற நினைப்பு சிங்கள மக்களுக்கு இருக்கும்வரை சிறிலங்கா அரசின் போர் முயற்சிகளுக்கு அவர்கள் தமது ஆதரவினை வழங்குவார்கள். அங்கு குறைந்த எண்ணிக்கையாக இருக்கிற சமாதான ஆர்வலர்களினால் இந்நிலையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது.
இலங்கைத்தீவினைப் பொறுத்தவரை, 2008ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரனின் படுகொலையுடன் மலர்ந்திருக்கிறது. இவ்வாண்டு இது போன்ற அரசியல் கொலைகள் உட்பட மனிதவுரிமை மீறல்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இது வெறும் ஆருடம் அல்ல உண்மை நிலவரம் என்பதனை தொடர்ந்து வரும் நிகழ்வுகள் சுட்டிநிற்கின்றன.
மலரவிருக்கும் புத்தாண்டில் கிழக்கு ஐரோப்பாவில் புதிய தேசமாக கொசோவோ உருவாகவிருக்கிறது. தமிழீழ தேசத்துடன் ஒப்பிடுகையில் மக்கள் தொகையிலும், இடப்பரப்பிலும் சிறிதான கொசோவோவிற்கு உலகநாடுகள் அங்கீகாரம் வழங்குவது, தமிழீழ மக்கள் மத்தியில் ஒரு அங்கலாய்ப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும் தமிழீழ தேசம் உருவாவதற்கு எதிராக நியாயப்படுத்தப்பட்ட சில விடயங்கள் கொசோவோ தேசத்தின் உதயத்துடன் அடிபட்டுப் போகிறது என்பதில் நாம் திருப்தியடைந்து கொள்ளலாம்.
இலங்கைத்தீவில் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு என்பது ஒரு உள்நாட்டு விவகாரம் என இன்னமும் யாராவது கூறிக்கொண்டிருப்பார்களேயானால் அவர்களையிட்டு நாம் சிரத்தை கொள்ளத் தேவையில்லை. இருப்பினும் தங்களது வசதி கருதி சில நாடுகள் இன்னமும் இப்படிக்கூறி தங்களது பொறுப்புக்களை தட்டிக்கழித்துக்கொண்டு மறுபுறம் சிறலங்கா அரசுடன் உறவுகளைப் பேணி தமது வர்த்தக, பிராந்திய நலன்களை பேணிவருகின்றன.
இலங்கைத்தீவில் தேசிய இனங்களுக்கிடையிலான பிரச்சனைக்கு இராணுவ வழிமுறையில் தீர்வு காண்பது என்பதில் சிங்கள தேசம் உறுதியாக இருப்பது இப்போது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. இவ்விடயத்தில் இன்னமும் யாருக்காவது சந்தேகமிருந்தால் அதனை நிவர்த்தி செய்வதுபோல் அமைந்திருந்தது இம்மாதம் சிறிலங்கா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டம். தெற்காசியாவிலேயே தமது நாட்டின் வரவுசெலவுத்திட்டத்தில் அதிக பங்கினை இராணுவ செலவினங்களுக்காக ஒதுக்கும் நாடாக சிறிலங்கா மாறியுள்ளது. அமைதியைப் போதிக்கும் பௌத்தமத்தத்தை அரசியல் சாசனம் மூலம் பாதுகாக்கும் சிறிலங்காவில் கல்விக்கு செலவிடும் தொகையைவிட இராணுவத்துக்கு செலவிடுவது அதிகமாக இருக்கிறது.
ஐ.நா.வின் மனிதவுரிமைகள் ஆணையளார் லு}யிஸ் ஆர்பரின் இலங்கைப் பயணம் பற்றிய செய்திகளும், ஆய்வுகளும் கடந்த இரண்டு வாரங்களாக ஊடகங்களை நிறைத்திருந்தன. கனடா குபெக் மாநிலத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி சிறிலங்கா அரசுக்கும் சிங்கள் கடும்போக்காளர்களுக்கும் சிம்மசொப்பனமாகத் தெரிந்தார். அவரது பயணத்துக்கு பின்னர் தீவில் மனித உரிமை விடயத்தில மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் சிறிலங்கா அரசுக்கு இவ்விடயத்தில் ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்த நான்கு பிரமுகர்கள் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்கள். மேற்குலகை திருப்திப்படுத்துவதற்காக சிறிலங்கா அரசுடனான தமது உறவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
நியுயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 62வது கூட்டத்தொடரில் சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆற்றிய உரையிலிருந்து பெற்றதே இந்தத் தலைப்பு. எதிர்பார்த்தபடி, அங்கு அவர் குறிப்பிட்ட கருத்துக்கள் தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை சர்வதேசப் பயங்கரவாதத்துடன் இணைத்து தமது தவறுகளிலிருந்து தப்பிப்பதாய் அமைந்திருந்தன. சாதித்தது எதுவுமில்லாதவிடத்து, பொருளாதாரம், சமூக நியாயம், மனிதவுரிமை என எல்லா விடயங்களிலும் சரிந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டின் தலைவரிடமிருந்து நாம் அதிகமாக எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் சர்வதேசப் பயங்கரவாதம் என்ற பூச்சாண்டியைக் காட்டி தமது
“தமிழ் மக்களின் அபிலாசைகளை தான் அறிந்திருந்தும் சிங்கள மக்களின் வாக்குக்களே தனக்கு முக்கியமானவை. எனவே அவர்களுக்கு ஏற்புடைய தீர்வொன்றைப்பற்றி மட்டுமே தன்னால் சிந்திக்க முடியும்” எனவும் “சமஸ்டி முறைமை என்பது சிங்கள மக்களுக்கு கெட்ட வார்த்தை போலிருப்பதால் அதுபற்றி தான் அக்கறைப்படவில்லை” எனவும் திரு. மகிந்த இராஜபக்ச இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற கருத்துக்களை முன்பிருந்த சிங்களத்தலைவர்களும்; பூடகமாகத் தெரிவித்து வந்திருக்கிறார்கள். ஆனால் சிங்கள மக்களின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படையாகத் அறிவித்திருக்கும் மகிந்த பாராட்டுக்குரியவர். 2005ம் ஆண்டில், அவர்பதவியேற்ற சிலகாலத்தில், அவரை ஒரு யதார்த்தவாதி என திரு.
Recent comments
5 weeks 3 days ago
5 weeks 3 days ago
5 weeks 4 days ago
6 weeks 1 day ago
6 weeks 1 day ago
6 weeks 6 days ago
7 weeks 2 days ago
7 weeks 6 days ago
8 weeks 6 days ago
8 weeks 6 days ago