“வலன்ரைன்ஸ் டே” வருகுது.. ஒரு பூவாவது கிடைக்க வேணும் என்று எதிர்பார்க்கிற பருவத்தை நான் கடந்து வி;;ட்டாலும், எனது பழைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். அந்த நாட்களில் இந்தாள் வாழ்ந்த ஊரிலை எங்கையடாப்பா “வலன்ரைன்ஸ் டே” கொண்டாடினார்கள். பேய்சுத்து சுத்தப்போறான் எண்டு என்னைத் தெரிஞ்சவை நினைக்கலாம். அங்கு காதலரருக்கு என ஒரு நாளை ஒதுக்கவில்லைத்தான், அதற்காக நாங்கள் காதலிக்க இல்லை எண்டு நீஙகள் சொல்லேலாதுதானே..
சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அரசபயங்கரவாத நடவடிக்கைளை சர்வதேச சமூகம் தட்டிக் கேட்கும், அதன் மூலம் நீதியான தீர்வு ஒன்று சாத்தியமாகலாம் என்ற நம்பிக்கை ஈழத்தமிழர்களிடம் இருந்து வந்துள்ளது. ஆனால் காலியில் நடந்து முடிந்த இலங்கைக்கு உதவிவழங்கும் நாடுகளின் மாநாட்டின் பெறுபேறுகள், அந்த நம்பிக்கையை பொய்யாக்கி விட்டது. இனவழிப்பு யுத்தம் ஒன்றை முன்னெடுத்து மனித அவலங்களையும், அப்பட்டமான மனிதவுரிமை மீறல்களையும் செய்து வரும் சிறிலங்கா அரசுக்கு இந்நாடுகளின் அரசாங்கங்கள் 4.5 பில்லியன் டொலர் உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளன. சமாதான வழிமுறையை தொடரவேண்டும் என்ற நிபந்தனையுடன் இவ்வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தாலும், இது சிறிலங்கா அரசினை தட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகவே கருதப்படவேண்டும்.
Recent comments
2 weeks 3 days ago
7 weeks 2 days ago
7 weeks 4 days ago
10 weeks 2 days ago
12 weeks 52 min ago
12 weeks 1 hour ago
12 weeks 1 hour ago
22 weeks 1 day ago
22 weeks 1 day ago
22 weeks 3 days ago