பேப்பர் 068

இலங்கைதீவின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணப் புறப்பட்டுள்ள ஈழவர்

by:
- கோபி -

ஈழப் புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்) அமைப்பின் தாபகரான திரு. இளையதம்பி இரத்தினசபாபதியை நினைவுகூருமாக மார்ச் 24ம் திகதி; “Sri Lanka at Ethnic Crossroad”  எனும் தலைப்பில் மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது.
லண்டன் பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாடு காலையில்  திரு. இரவிச்சந்திரா சுந்தரலிங்கத்தின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது.

என் ஞாபகப்பதிவிலிருந்து....

12வருடங்களின் பின் ஊரை மிதித்த போது உண்டான மகிழ்வும் நாங்கள் படித்த அந்த ரியூசன் வளவும் தந்த ஞாபகங்கள் எத்தனையோ. அந்த மாமரமும் பலாமரமும் சொன்ன சோகங்கள் இதயத்தை இறுக்கிப் பிழிந்து மனசை வதைத்த கணங்கள் ஒவ்வொன்றும் நினைவுகளை விட்டுப் போகாமல் மனசுக்குள் மழைத் தூறலாய் நனைத்துக் கொள்கிறது.

அது 'பிறெய்ன் கல்வி நிலையம்" 6ம்வகுப்பு முதல் 9ம்வகுப்பு வரை கல்வி தந்த அந்த வளவும் சிவாமாஸ்ரரின் உழைப்பில் குப்பிளானிலேயே முதல்தர கல்வி நிலையமாக உருவாகியது மட்டுமின்றி ஊரிலே உருவாகிய அனேகமான இளம் கெட்டிக்காரர்களின் உருவாக்கத்திலெல்லாம் ஊக்கு சக்தியாய் நின்ற அந்த மனிதரின் உழைப்பெல்லாம் இன்று உருக்குலைந்து உருமாறி.....

பிரஞ்சுக் கைதுகள் வெளிப்படுத்தும் செய்தி

ஏப்பிரல் முதலாம் திகதி பிரான்ஸில் தமிழ் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் பதினேழு பேர் அந்நாட்டு விசேட காவல்துறையினால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு உள்ளார்கள். தமிழ் மக்களிடம் வற்புறுத்தி பணம் சேகரித்தார்கள் என்ற சந்தேகத்தில் இக்கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக இச்சம்பவத்துக்கு முக்கியத்துவம் கொடு;த்துச் செய்தி வெளியிட்ட பிரஞ்சு ஊடகங்கள் அறிவித்தன. ஆதாரமற்ற் இக்குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்ப்பதுபோல் முகம் காட்டாத ஒரு நபரின் வாக்கு மூலம் இச்செய்தியறிக்கைகளில் ஒளிபரப்பப்பட்டன. ‘தலையாட்டி’ களுக்கும் சோரம்போனவர்களுக்கு பஞ்சமில்லாத எமது இனத்திலிருந்து இப்படியானவர்களை கண்டு பிடிப்பதில் இந்த ஊடகங்களுக்கு சிரமம் இருந்திருக்காது.





 











Syndicate content