ஈழத்தமிழர் பற்றிய மற்றுமோர் திரைப்படத்தை கடந்தவார இறுதியில் லண்டனில் பார்க்கக் கிடைத்தது. இந்த திரைப்படத்தின் தலைப்பே தமிழ்போராளிகள் பற்றிய கதையென்பதை சொல்லி நிற்கிறது. இந்தியாவின் பிரதமராகவிருந்த ராஜிவ் காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என கருதப்பட்ட சிவராசன், சுபா உடப்பட்ட ஈழத்தமிழர்களை இந்திய காவல்துறை தேடி வலைவிரித்ததையும் அவர்கள் மரணிப்பதற்கு முந்திய 21 நாட்களில் அவர்களது தலைமறைவு வாழ்க்கையில் நடைபெற்றதாகக் கருதப்படும் சம்பவங்களை ஒரு விவரணப்பாணியில் (Melodrama)
புடமாக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளுடன் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஓப்பந்தத்தை பொருட்படுத்தாது, மாவிலாற்றில் தாக்குதல்களை நடாத்தி நிலஅபகரிப்பை நடாத்தி ஒரு வருடமாகிறது. இக்காலத்தில் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் வெறுமனே மனித உரிமை மீறல்கள் என்று ஒதுக்கிவிட முடியாது. இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகள். சர்வதேச அரசுகளும் மனிதவுரிமை அமைப்புக்களும் இவ்விடயத்தில் போதிய கவனம் செலுத்தாமையினால், இதனை வாய்ப்பாகப் பாவித்து தமிழ்மக்களின் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது. ஆனால் நிலமை சர்வதேச அமைப்புக்களினால் புறக்கணிக்க முடியாத அளவுக்கு மோசமடைந்துள்ளதால் அவை விழித்துக் கொண்டு செயற்பட ஆரம்பித்துள்ளன.
Recent comments
2 weeks 14 hours ago
2 weeks 2 days ago
5 weeks 20 hours ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
17 weeks 3 hours ago
17 weeks 3 hours ago
17 weeks 1 day ago
17 weeks 5 days ago