நினைவுகள்

ஈழத்தின் போரியல் வல்லுனர் பிரிகேடியர் பால்ராஜ்

by:
அ.மயூரன்

  Brig. Balraj

 

 

 

 

 

 

 

 

 

 

தமிழீழ விடுதலைப் போராட்ட சண்டைக் களங்களில் பால்ராஜ் என்ற மந்திரச் சொல் சிங்களத்தின் சேனைகளை கலங்கடித்து நின்ற வேளை வானலைகளில் எம் காதுக்குள் வந்த செய்தி பொய்க்காதா என ஏங்க வைத்த பிரிகேடியர் பால்ராஜ் (கந்தையா பாலசேகரன்)  அவர்களின் மறைவு உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை உலுக்கி பெருந்துயரில் ஆழ்த்தியது.

தமிழீழத்தின் இதயபூமி எனப்படும் கொக்குத் தொடுவாயை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1983 போராட்டத்தில் உள்வாங்கப்பட்டு இந்தியாவிலே 9வது பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக் கொண்டு வன்னி திரும்பியவர் 

Tribute to Mr Poopalapillai Sangaravel

Mr Poopalapillai Sangaravel
 13.06.29 – 09.06.08

Veteran civil servant and renowned social worker Poopalapillai Sangaravel, former Additional Government Agent of Batticaloa is remembered with gratitude for his committed, relentless and yeoman service to the people of the Eastern Province for a long time.

Born on 13th June 1929 at Periyakallaa’ru in Batticaloa, Mr. Sangaravel had his early education at Sivananda Vidyalayam, Batticaloa. He later went to study at Jaffna Central College from where he entered the University of Ceylon, Peradeniya, and graduated in Agriculture.

He became a member of the Ceylon Administrative Service, the predecessor of today’s SLAS and served as District Land Officer in the Trincomalee, Vavuniya and Mannaar districts before becoming the Additional Government Agent of Batticaloa. For short spells he also worked as Additional GA at Puththa'lam and as Deputy Director in the Ministry of Finance and Development.

As Secretary of the University College, Batticaloa, in its incipient days between 1983 and 1986, his contribution to develop it as the Eastern University of Sri Lanka is very well remembered and appreciated.
He was coordinator for UNDP in the NorthEast Province when the provincial administration was created and left it due to compelling situations in 1990 to settle in UK.

When he left Sri Lanka he availed his houses for the use of a charity organization for the blind, called Tharisanam.

சுஜாதா என்கிற ஆளுமை

by:
பொ. கருணாகரமூர்த்தி

முன்பெல்லாம் சுஜாதாவை  நினைத்தால் உடம்பெல்லாம் ஒருவகைப் பரவசமும் உற்சாகமும்  தொற்றிக்கொள்ளும். 27.02.2008 க்குப்

இந்த இரவில் ஈரநினைவாக.....

அர்த்தராத்திரியில் அழைத்த அந்தத் தொலைபேசி அழைப்பு. முதல் குரல் அது றமணி. அவளும் றமணியும் ஒரே ஊரில் பிறந்து சிறுவயது முதல் ஒரே பாடசாலையில் படித்து, 14 வயதில் அவள் 12 வயதால் மூத்த ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டு கிறுக்கு வயதின் கிறுக்குத்தனங்கள் எதையுமே அனுபவிக்காது குடும்பம் என்ற கூட்டுக்குள் சிக்கித்து குடும்பவாழ்வு இனிப்பா , கசப்பா , சுகமா , சுமையா? எப்படியான கேள்விகளுக்கும் ஒரு புன்னகையால் மட்டும் எதையுமே வெளிப்படுத்தாத அவளது சுபாவம். இப்படி நிறைய றமணி பற்றிய ஞாபகங்கள்......

ஏய் உன்னோடை ஒராள் கதைக்கப் போகுதாம் ? யாரது ? அவளது கேள்விக்கு பதில் வரமுன்னம் றமணியின் கையிலிருந்து தொலைபேசி கைமாறி ஆண்குரல் ஒன்று அவளை நலம் விசாரிக்க... குழம்பிப் போகிறாள்.
என்னை ஞாபமிருக்காதெண்டுதான் நினைக்கிறேன்.

பாலா அண்ணா இல்லாத ஒரு வருடம்

Anton Balasinghamகடந்த வாரம் லண்டனில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வு முன்னரைவிட எழுச்சியாக நடைபெற்றது. பணிக்குரிய நாளான செவ்வாய் பகலில் இருபத்தைந்தாயிரம் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இம்முறை சிறப்புரையாற்ற வந்தவர் பேராசிரியர் சு.ப. வீரபாண்டியன். தன்னால் பாலா அண்ணாவைப்போல் தலைவரது உரைக்கு பொழிப்புரை வழங்கமுடியாது எனத்தன்னடக்கத்துடன் கூறிவிட்டு, தலைவரது பேச்சையொட்டி சில கருத்துக்களை தெரிவிப்பதாகக்கூறித் தனது உரையை நிகழ்த்தினார்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்

by:
கோபி

நினைவில்:
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்
(29.07.1967 -02.11.2007)

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்நேற்றுவரை புன்னகை பூத்தபடி ஊடகவியலாளர்களையும், சர்வதேச இராசதந்திரிகளையும் ஏன் தனது எதிர்தரப்பில் உள்ள சிறிலங்கா அரசியல் தலைவர்களையும் எதிர்கொண்ட,  அரசியற்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன்  கடந்த 2ம் திகதி வெள்ளியன்று காலை சிறிலங்கா வான்படையின் தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

 உண்மையில் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியற் பொறுப்பாளர். ஆனால் எங்களின் பிரதிநிதியாக உலக அரங்கில் செயற்பட்டவர் என்பதனால் அவர் எங்களில் ஒருவராய், ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிநிதியாக எங்கள் உணர்வுகளில் நிறைந்திருக்கிறார். இதன் தாற்பரியத்தை மற்றவர்கள் புரிந்து கொண்டார்களோ இல்லையோ, சிங்கள தேசம் நன்றாகப்புரிந்து கொண்டிதிருந்தது. அதானால்தான், அவர் மரணத்தையிட்டு மகிழ்ந்து ஆரவாரித்தது. இந்த மனிதாபிமானமற்ற செய்கைகள் மூலம் சிங்களம் தன்னை இனங்காட்டிக் கொண்டதுடன், உலகத்தமிழனத்தின் உணர்வுகளை உலுப்பிவிட்டுள்ளது. தமிழ்ச்செல்வன் என்ற தமிழர்களின் புதல்வன் தன் மரணத்தின் மூலமும் தன்னினத்தின் மனக்கதவுகளைத் தட்டிச்சென்றிருக்கிறான்.

சப்பறம் பாக்கலாம்

by:
சாத்திரி

கடந்த ஞாயிறன்று பாரிஸ் மாணிக்க பிள்ளையார் கோவில் தேரிற்கு சென்றிருந்த வேளை ஊர் நண்பனுடன் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழா ஞாபகங்களை நினைத்து பேசிய பொழுதுதான் வாழ் நாளில் எப்படி எங்கள் சில நகைச்சுவை அனுபவங்களை மறக்க முடியாதோ அது போலவே எங்களால் ஏதோ ஒரு சில காரணங்களிற்காக சில நகைச்சுவையான அல்லது வேடிக்கையான மனிதர்களையும் வாழ் நாளில் மறக்க முடியாது. அப்படியான ஒரு உறுவுக்காரர் எங்கள் ஊரில் இருந்தார்.கதைக்காக அவரிற்கு ராசா பெயர் வைக்கிறேன். ராசா நன்றாக படித்து புகையிரத ஓட்டுனராக வேலையும் செய்தார்.

பாலாபிசேகம் செய்வதும் .. பாதுகை காவுவதும்...

by:
பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின்.

எங்கள் தந்தையார் முருகேசு பொன்னையா அவர்களுக்கும் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மதுரை மணி ஐயர், எம்.கே.தியாகராஜா பாகவதர் இவர்களைப்போலவே சற்றே பெண்மைகலந்த பட்டுச்சாரீரம், வெகு இனிமையாகப் பாடுவார். எம்.கே.தியாகராஜபாகவதரின் இசைமேல் பெரும் பித்தேகொண்டிருந்தார் தந்தையார். குறிப்பாக மணி ஐயர், அரியக்குடி , எம்.கே.தியாகராஜா பாகவதர்,பி.யு. சின்னப்பா பாடல்களுள் இசைத்தட்டாக வெளிவந்தவற்றின் அனைத்துப்பிரதிகளையும் வாங்கிப் பெரிய சேகரிப்பாகப் பதுகாத்து வைத்திருந்தார். அவரது பித்தின் உச்சக்கட்டமாகத் தன் ஆதர்சக்கலைஞனை நேரில் கண்டுவரவேண்டுமென்று யாழ்ப்பாணத்திலிருந்து பாகவதரது பரமரசிகர்களாக மேலும் பத்துப்பன்னிரண்டு ஆசாரிமார்களைத் திரட்டிக்கொண்டு 1950ம் ஆண்டு சென்¨னைக்கு வந்திருக்கிறார்.

த.ஈ.வே.வெ.வெ........

by:
சாத்திரி

என்னது ஏதோ குழந்தை பிள்ளைகள் கதைக்க தொடங்கிற காலத்திலை கதைச்ச மாதிரி இருக்கே எண்டு யோசிக்கிறீங்களா. கடந்த வார ஒரு பேப்பரில் பாலச்சந்திரன் அண்ணாவும் பா.வை.ஜெயபலனும் ஆடிமாதத்து நினைவுகளை கிழப்பிவிட்டு போய் விட்டார்கள். அதனால்தான் எனது இந்த ஆடிமாதத்து நினைவும். ஆனால் இது அம்மி பறந்த நினைவு அல்ல ஆனால் இது இலங்கையில் 83ம் ஆண்டு தமிழர் அடிவாங்கி பறந்தோடிய ஆண்டு நினைவு.

படம் காட்டுறம் வாங்கோ

by:
சாத்திரி

இதுவும் 80களின்ரை ஆரம்ப காலகட்ட கதைதான் இந்த காலகட்டம்தான் தொலைகாட்சி பெட்டியும் இலங்கையிலை பரவலா அறிமுகமாக தொடங்கின கால கட்டம். அந்த கால கட்டத்திலை கோயில் திருவிழா. கலியாணவீடு .சாமத்தியவீடு எண்டு எல்லா மங்கல விழாவிலையும் ரிவியிலை விடிய விடிய அஞ்சு . ஆறு படம் ஓடுறகாலம்.ஆரம்பத்தில் இந்த ரிவி டெக் ஆகியவற்றை சில வீடியொ கடையளும் வாடைகைக்கு விடுவினம் அவையளிட்டை போய் சொன்னா சரி. ரிவி டெக் ஆகியவற்றை ஒரு வானில் கொண்டு வந்து இறக்கி படத்தை போட்டு செற்பண்ணி விட்டிட்டு படங்களை மாத்துறதுக்காகவே ஒருதர் விடிய விடிய காவல் நிப்பார்.

மனதுக்குள் மட்டும் வாழ்ந்தது …

by:
இரவிசங்கர்

“வலன்ரைன்ஸ் டே” வருகுது.. ஒரு பூவாவது கிடைக்க வேணும் என்று எதிர்பார்க்கிற பருவத்தை நான் கடந்து வி;;ட்டாலும், எனது பழைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். அந்த நாட்களில் இந்தாள் வாழ்ந்த ஊரிலை எங்கையடாப்பா “வலன்ரைன்ஸ் டே” கொண்டாடினார்கள். பேய்சுத்து சுத்தப்போறான் எண்டு என்னைத் தெரிஞ்சவை நினைக்கலாம். அங்கு காதலரருக்கு என ஒரு நாளை ஒதுக்கவில்லைத்தான்,  அதற்காக நாங்கள் காதலிக்க இல்லை எண்டு நீஙகள் சொல்லேலாதுதானே..

எழுபத்தைந்தாவது வயதில் என் பேராசான் - கா. சிவத்தம்பி

நினைக்க இனிக்கின்ற ஒருவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. உணர்வு தொட்டு அவர் உரையாடல் இருக்கும். உறவின் சகல பரிமா
ணங்களும் அவர் பேச்சில் தொனிக்கும். அவர் என்னை மைந்தனாகப் பார்த்தாரா, மாணவனாகப் பார்த்தாரா எனக்கு எதிலும் தெளிவு இல்லை.

ஓம் அவரிடம் நான் மாணவனாக இருந்தேன். அது ஒரு சில ஆண்டு. ஆயினும் இற்றைவரை  அவர் மைந்தனாக வாழ்கிறேன். அவர் மூன்று மகள்களும் `அண்ணா' என்று கூப்பிடுகின்ற உறவில் திளைத்து நான் அவர் மைந்தனாக வாழ்கிறேன். தமிழை சிறப்புப்பாடமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நான்கு வருடம் அவரிடம் கற்றுத் தேறினேன். முதுகலைமானிக்கு நாடகமும் அரங்கியலையும் அவரிடம் கற்றேன்.

தராக்கி - சில நினைவுகள்

மட்டக்களப்பு வாவியின் மேலோடி நிற்கும் புளியந்தீவுப் பாலத்தில் உறைந்தவாறு கிழக்கின் தென்றலை சுகித்து சுவாசித்த, இன்பவசப்பட்ட அந்த மண்ணின் மைந்தன் அந்த மண்ணின் வளத்துக்காகவே புதைக்கப் பட்டான் போலும். உலகத்தின் திக்குகள் எல்லாம் அவன் பாதங்கள் பதிந்திருந்தாலும் அவன் தன் ஆழ்மனதின் அமைதி தேடி அந்த மட்டக்களப்பு மண்ணுக்கே ஓடிவந்து கொண்டிருந்தான். அந்த மண்ணிலே தமிழ் மக்களைத், தமிழ் மக்களே காயப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் இரு வருடங்களுக்கு முன் ஆரம்பித்த கணங்களில் செங்குருதி சிந்தாத ஒருமைப்பாடு காண விரைவுகொண்டு விழைந்தவன் அவன். அவன்தான் தராக்கி என்று எம்மால் அழைக்கப்பட்ட தர்மரட்னம் சிவராம்.





 











Syndicate content