எனது பெயர் மாதவன். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். ஏன் இந்த பொடியள் மொட்டாக்கை போட்டுக்கொண்டு எங்களை இப்படி பயமுறுத்துகிறார்கள். இந்த மொட்டாக்கு கலாச்சாரம் எந்த இனத்தவர்களிடம் இருந்து தொடங்கியதோ தெரியாது ஆனால் இப்போ எல்லா இளய சமூகத்தையும் பிடித்து ஆட்டுகின்றது. கீழே விழுந்து விடுமோ என்று பயப்படுகிற மாதிரி ஒரு காற்சட்டை, முடிந்தால் காதில் ஒரு தோடு, நெற்றி, தலை, காது ஒன்றுமே தெரியாத மாதிரி பெரிய ஒரு மொட்டாக்கு. நான் வேலை முடிந்து இரவு தான் வீட்டுக்கு வாறனான். உந்த பத்திரிகை கொட்டை எழுத்து கொலைகளையும், கத்திக்குத்துக்களையும் வாசித்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வரவேண்டி உள்ளது. அதிலும் வரும் போது இந்த மொட்டாக்கு போட்ட பொடியளைக் கண்டால் வயத்தைக்கலக்கும். ஏன் உதுகள் உப்பிடி ஒரு மொட்டாக்கோடு அலையுதுகள்.
ஆச்சிக்கு வணக்கம். நான் எனது ஆதங்கம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எழுதுகிறேன். முன்பு ஒரு காலத்தில் ஊரில் படித்தவர்களுக்கென ஒரு மரியாதையிருந்தது. பணமிருப்பவர்களுக்கு எனவும் ஒரு மரியாதையிருந்தது. ஆனால் இங்கு வெளிநாட்டில் வரவர படித்தவர்கள் சரி படிக்காதவர்கள் சரி எல்லோருமே பணத்திற்கும், வெளிப்பகட்டுக்கும் அடிமையாகி ஒரு போலிகௌரவத்தில் வாழுவதாகத் தெரிகிறது. உங்கள் அபிப்பிராயாம் எப்படி இந்த விடயத்தில்?
Recent comments
5 weeks 3 days ago
5 weeks 3 days ago
5 weeks 4 days ago
6 weeks 1 day ago
6 weeks 1 day ago
6 weeks 6 days ago
7 weeks 2 days ago
7 weeks 6 days ago
8 weeks 6 days ago
8 weeks 6 days ago