பேப்பர் 102

பேப்பர் 102

வணக்கம்!

ஒரு பேப்பர் தொடங்கின காலத்திலிருந்தே அதுக்கு ஒரு பரந்த வாசகர்தளம் ஏற்பட்டுட்டுது. இது நாங்களே எதிர்பார்க்காத ஒண்டு. இருந்தாலும் உங்களை நாங்கள் எண்டைக்குமே குறைச்சு மதிப்பிடேல்லை. அதுபோல எங்களோடை இணைஞ்சு செயற்படுகிற ஆக்களின்ரை நேர்மையையும் உழைப்பையும் எப்பவுமே நாங்கள் மதிக்கிறோம். எல்லாரையும் எல்லாநேரமும் திருப்திப்படுத்தி கொண்டிருக்கிறது அல்லது முதுகு சொறிந்து கொண்டிருக்கிறது எங்கடை நோக்கமில்லை. ஒரு சமூகப் பேப்பர் எண்ட வகையிலை சமூகத்திலை நடைபெறுகிற விசயங்களைத்தான் எழுதுகிறோம், பிரசுரிக்கிறோம்.

சிறிலங்கா அரசுடன் சேர்ந்தோடும் மேற்குலகம்

by:
எழுபரிதி

கடந்த ஒரு பேப்பரில் வெளிவந்த எனது “குறிவைக்கப்படும் ஈழத்தமிழர்களும், மேடைக்கு அலையும் புத்திஜீவிகளும்” என்ற கட்டுரையில் மலேசியாவில் நடைபெற்ற மாநாடு பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இம்மாநாட்டில் தான் கலந்து கொண்டமை தொடர்பாக பேராசியர் செல்வா செல்வநாதன் “ஒரு பேப்பர்” க்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். மேற்படி மாநாட்டில் அவர் தனது சொந்தச் செலவில் கலந்து கொண்டதாகவும், அங்கு தன்னால் முடிந்தவரையில் தமிழர் பக்க நியாயங்களை விளக்கியதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவலத்துக்கு உள்ளாகியுள்ள எம்மக்களுக்கு உதவுவோம்!

இலங்கைத்தீவில் கடந்த முப்பது ஆண்டுகளாக தொடரும் யுத்தத்தில், ஈழத்தமிழ்மக்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்துள்ளனர். ஆனால்,
இன்று அவர்கள் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு, பாரிய மனிதஅவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழினத்தின் இருப்பே கேள்விக்குறியாகியுள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நோக்கி அகோர எறிகணைத்தாக்குதல்களையும், விமானத்தாக்குதலகளையும் நடாத்தி வரும் சிறிலங்காப்படைகள் அவர்களுக்கு, அத்தியாவசியமான பொருட்கள் சென்றடைவதனை தடுத்து வருகின்றனர். மக்களை அங்கிருந்து வெளியேற்றி, தமது ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில், அகதி முகாம்களில் முடக்கி விடுவதற்கு, எல்லாவிதமான முயற்சிகளையும் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகிறது.





 











Syndicate content