“ஒஸ்டவிற்சிலும் வோட்டர்லூவிலும் உடல்களைக் குவியுங்கள். உயரமாக. (எனக்கு) கீழே அள்ளிக் கொட்டுங்கள். நான் எனது வேலையைப் பார்க்க, நான் தான் புல். நான் எல்லாவற்றையும் மூடி விடுவேன்”
- கார்ல் சான்ட்பேர்க் (1878 – 1967)
இறுதியாக ஒரு பேப்பர் வெளிவந்த போதிருந்த சூ+ழலுக்கும் தற்போது பல வார கால இடைவெளியின் பின் மீண்டும் இப்பத்தியை எழுதும் போதுள்ள சூழலுக்கும் இடையில் பாரிய மாற்றங்கள் நடந்தேறி விட்டன. முள்ளிவாய்க்கால் அனர்த்தம் தமிழர் வாழ்வில் என்றுமே அழியாத வடுவாக விளங்கும். தமிழ் பிரக்ஞையில் எப்போதுமே அதிர்ந்து கொண்டு இருக்கும்.
“The problem is, Karnanishi symbolises Tamil, the rhetoric. The tragedy of Tamil Nadu is, as I look at it as a student of Tamil literature and as a Marxist, there has been a de-ideolgisation of politics. As a Marxist I would say that the basic problem was that the Dravidian ideology was not shaped in terms of economics”
- Prof. Karthigesu Sivathamby
அறுபது ஆண்டு கால திராவிட இயக்கத்தின் செயற்பாட்டு அரசியல் தொடர்பான தனது விமர்சனத்தில் பேராசிரியர் சிவத்தம்பி மிக முக்கியமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார், அதாவது தலித் மக்களின் பொருளாதார விடிவை உறுதிப்படுத்துப்படுத்தும் விதமாக நில உரிமை தொடர்பான காத்திரமான சீர்திருத்தம் எதனையும் திராவிட இயக்கங்கள் அமுல்ப்படுத்தவில்லை என்பதே அவரது குற்றச்சாட்டாகும்.
Recent comments
15 hours 50 min ago
2 days 14 hours ago
4 days 15 hours ago
5 days 7 hours ago
6 days 8 hours ago
1 week 13 hours ago
1 week 1 day ago
1 week 2 days ago
1 week 2 days ago
1 week 3 days ago