பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் தலைவிதி சிங்கள
ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பிலிருந்தான கடந்த 60 ஆண்டு காலப்
பகுதியில் தமிழினம் அனுபவித்த கொடுமைகள் சொல்லிலடங்கா.
இந்தக்
கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தமிழனத்தின் உரிமைப் போருக்கு "பயங்கரவாத" முலாமிட்டு அந்த உரிமைப் போரை நசுக்குவதற்கு உலகமே திரண்டு
முயன்று அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டு விட்டன.
இன்றைக்குச் சிறிலங்காவிலே இனவாதம் கக்குகின்ற கட்சிகள் என்றதுமே எம் நினைவில் வருவது ஜாதிக ஹெல உறுமயவும் ஜனதா விமுக்தி பெரமுன என்கின்ற ஜே.வி.பியும் தான்.
ஆனால் இலங்கையின் அரசியலையும் ஜெ.வி.பி.யின் கடந்த காலத்தையும் பின்நோக்கிப் பார்த்தால் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகச் சரியான பாதையிலே செல்லுகின்ற அரசியல் கட்சியாகவே ஜெ.வி.பியைப் பார்க்க வேண்டி இருக்கிறது.
முதலாவதாக மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜெ.வி.பியினர் ஜனநாயகத்திலே பாராளுமன்ற அரசியலிலோ எப்போதுமே நம்பிக்கை கொண்டவர்களல்ல.
Recent comments
16 hours 1 min ago
2 days 14 hours ago
4 days 15 hours ago
5 days 8 hours ago
6 days 8 hours ago
1 week 14 hours ago
1 week 1 day ago
1 week 2 days ago
1 week 2 days ago
1 week 3 days ago