பேப்பர் 087

ஒரு பேப்பர்

வணக்கம்!

ஒரு புறம் குளிர் வாட்டினாலும், பேப்பரை நேரத்துக்கு உங்களிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் விசைப்பலகையை தொடும் போது பேப்பரை படித்து விமர்சிக்கப்போகின்ற அல்லது மகிழ்வடையப்போகின்ற உங்கள் முகங்களே தெரிவதால் வேறெதுதும் தெரிவதில்லை.

அண்மைகாலமாக ஒரு பேப்பர் பற்றிய விமர்சனங்கள் அதிகரித்துள்ளமை தெரியுது. இப்பத்தான் நாங்கள் பரந்த வாசகர் பரப்பை அடைந்திருக்கிறம் என்பது மகிழ்ச்சி தரும் விடயமே. ஒரே ஒரு கவலை, அந்த விமர்சனங்களை எங்களுக்கு அனுப்பினால் அதனை நாங்கள் பிரசுரித்து மற்றவர்களையும் வாசிக்க வைக்கலாம்.

இந்த இரவில் ஈரநினைவாக.....

அர்த்தராத்திரியில் அழைத்த அந்தத் தொலைபேசி அழைப்பு. முதல் குரல் அது றமணி. அவளும் றமணியும் ஒரே ஊரில் பிறந்து சிறுவயது முதல் ஒரே பாடசாலையில் படித்து, 14 வயதில் அவள் 12 வயதால் மூத்த ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டு கிறுக்கு வயதின் கிறுக்குத்தனங்கள் எதையுமே அனுபவிக்காது குடும்பம் என்ற கூட்டுக்குள் சிக்கித்து குடும்பவாழ்வு இனிப்பா , கசப்பா , சுகமா , சுமையா? எப்படியான கேள்விகளுக்கும் ஒரு புன்னகையால் மட்டும் எதையுமே வெளிப்படுத்தாத அவளது சுபாவம். இப்படி நிறைய றமணி பற்றிய ஞாபகங்கள்......

ஏய் உன்னோடை ஒராள் கதைக்கப் போகுதாம் ? யாரது ? அவளது கேள்விக்கு பதில் வரமுன்னம் றமணியின் கையிலிருந்து தொலைபேசி கைமாறி ஆண்குரல் ஒன்று அவளை நலம் விசாரிக்க... குழம்பிப் போகிறாள்.
என்னை ஞாபமிருக்காதெண்டுதான் நினைக்கிறேன்.

காலாவதியான தீர்வுத்திட்டம்!

யுத்த நிறுத்த ஒப்பந்த்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகிக்கொண்ட சிறிலங்கா அரசு சர்வதேசநாடுகளின் கண்டனங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவசர அவசரமாக சிறிலங்கா அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் தனக்கேற்றவகையில் தீர்வுத்திட்டமொன்றை வெளியிட்டுள்ளது. மாகாணசபைகள் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பதே அந்த தீர்வுத் திட்டத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது.





 











Syndicate content