லாசப்பலில் லைலா

லா சப்பலில் லைலா

லா சப்பலில் லைலா

எல்லாருக்கும் வணக்கம்.

செய்தி எல்லாரும் அறிஞ்சிருப்பியள். கிழக்கின் (அ)சிங்கம் கருணா லண்டனிலை கைதாகி கம்பிஎண்ணுறாராம். அவரை பின்னாலை முன்னாலை நிண்டு இயக்கின எல்லாரும் கையை விட்டிட்டினமாம்.

எங்கடை வாழ்வுரிமை போராட்டத்தையும் எங்கள் வீரர்களின் தியாகங்களையும் எங்களை அடக்கிஆள நினைக்கிறவைக்கு அடைவு வைச்சு வயிறு வளக்க நினைக்கிறவை எல்லாருக்கும் இது ஒரு பாடமா இருக்கும்.

லா சப்பலில் லைலா

எல்லாருக்கும் வணக்கம் கோயில் காவடி விழையாட்டு விழா எல்லாம் முடிஞ்சு குளிர் தொடங்கபோகுது நானும் ஒரு போர்வை வாங்கவேணும். சரி பாரிஸ் மாணிக்க பிள்ளையார் கோயில் திருவிழா நடந்தஅண்டு யாரோ வாளுகளோடை வந்து இறங்கினவையை போலிசு பிடிச்சு கொண்டு போனதெண்டு போன பேப்பரிலை எழுதினான் எல்லாருக்கும் தெரியும் தானே?

அதுமட்டுமில்லை பிரான்சிலை உள்ள சிறீலங்கா தூதரகத்தி்ரை கொடியையும் யாரோ கிழிச்சு போட்டினமாம் பிறகென்ன இலங்கை அரசாங்கமும் அவையின்ரை புலத்து ஒட்டுண்ணிகளும் சேந்து புலியளின்ரை வேலைதான் அது எண்டு தங்கடை தளங்களிலை ஒரு செய்தியை விட்டு பாத்தவை ஒரு பிரயோசனமும் இல்லை. அதாலை இலங்கையிலை வெளிவாற விழங்காததீப(லங்காதீப) எண்டொரு பேப்பர் பிரெஞ்சு அரசாங்கத்தை திட்டி தீர்த்திருக்கு .





 











Syndicate content