கடந்தது.. நடந்தது

எங்கள் பள்ளிக்கூட அணி பக்கத்து ஊருக்கு விளையாடப் போனது

by:
கே.எஸ். பாலச்சந்திரன்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உதைபந்தாட்டத்தின் உலகக்கிண்ணத்திற்கான போட்டி எந்த நாட்டில் நடந்தாலும் பிரித்தானிய அரசாங்கம் வயிற்றில் நெருப்பைக்கட்டிக் கொண்டு இருக்குமளவிற்கு அந்த நாட்டின் உதைபந்தாட்ட ரசிகர்கள் நடந்து கொள்வார்கள். போட்டி நடக்கும் நாட்டிற்கு ஆயிரக்கணக்கில் போய் இறங்கி, தங்கள் அணியைத்தவிர வேறு எந்த அணி வென்றாலும் கலாட்டாதான். வேறு ஒரு நாட்டிற்குப்போய் அந்த நாட்டு ரசிகர்களிடம் கலாட்டா பண்ணுவதற்கும் ஒரு “தில்” இருக்கவேண்டும்.

இப்படியான “தில்” இருப்பதாக நினைத்துக்கொண்டுதான் ஒருமுறை எங்கள் பள்ளிக்கூட அணிக்கு ஆதரவாக நாங்கள் கொஞ்சப்பேர் வெளியூர் ஒன்றுக்குப் போனோம்.

வெள்ளம் வந்த நாள்

by:
கே.எஸ். பாலச்சந்திரன்

மலையாளமொழியில்  தண்ணீருக்கு “வெள்ளம்” என்று சொல்வார்கள் என்று கேள்விப்பட்டபின் எனக்கு ஒரு கேள்வி தோன்றி அதற்கு விடைதெரியாமல் மலையாளம்  “ பறையக்”கூடியவர்களைத் தேடிக்கொண்டு திரிகிறேன்.

வெள்ளமாகத் தண்ணீர் வந்தால் அதை மலையாளத்தில் எப்பிடிச் சொல்வது?

எங்கள் ஊரில் வெள்ளம் வந்த காலத்தை நினைத்துப்பார்க்கிறேன். நூறே நூறு பேர் வந்த விழாக்களையே ஜனவெள்ளம் வந்தது, எள்ளுப்போட்டால் எள்ளு விழாத கூட்டம் (எள்ளுப்போட்டால் வேறென்ன கொள்ளா விழும்) என்றெல்லாம் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். இது எங்கள் ஊரில் உண்மையாகவே வெள்ளம் வந்தது.





 











Syndicate content