எனது பெயர் மாதவன். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். ஏன் இந்த பொடியள் மொட்டாக்கை போட்டுக்கொண்டு எங்களை இப்படி பயமுறுத்துகிறார்கள். இந்த மொட்டாக்கு கலாச்சாரம் எந்த இனத்தவர்களிடம் இருந்து தொடங்கியதோ தெரியாது ஆனால் இப்போ எல்லா இளய சமூகத்தையும் பிடித்து ஆட்டுகின்றது. கீழே விழுந்து விடுமோ என்று பயப்படுகிற மாதிரி ஒரு காற்சட்டை, முடிந்தால் காதில் ஒரு தோடு, நெற்றி, தலை, காது ஒன்றுமே தெரியாத மாதிரி பெரிய ஒரு மொட்டாக்கு. நான் வேலை முடிந்து இரவு தான் வீட்டுக்கு வாறனான். உந்த பத்திரிகை கொட்டை எழுத்து கொலைகளையும், கத்திக்குத்துக்களையும் வாசித்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வரவேண்டி உள்ளது. அதிலும் வரும் போது இந்த மொட்டாக்கு போட்ட பொடியளைக் கண்டால் வயத்தைக்கலக்கும். ஏன் உதுகள் உப்பிடி ஒரு மொட்டாக்கோடு அலையுதுகள்.
Recent comments
2 weeks 14 hours ago
2 weeks 2 days ago
5 weeks 19 hours ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
6 weeks 5 days ago
17 weeks 2 hours ago
17 weeks 3 hours ago
17 weeks 1 day ago
17 weeks 5 days ago