இவ்வார கல்கியின் ஆசிரியர் தலையங்கம் 'விடுதலைப் புலிகளின் கொடிய சாதனை" என்ன சொல்லியிருக்கிறது ? விடுதலைப்புலிகள் குறித்த அமெரிக்க எவ்.பீ.ஐயின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கல்கியும் தனது பங்குக்கு ஏதோ கலக்கியிருக்கிறது. வளமையாக பல இந்திய ஊடகங்களின் மிகைப்படுத்தப்படும் பரபரப்புச் செய்திகளும் பொய்களையே பரப்புரைக்கும் பண்பையும் கல்கி மீண்டும் ஒருதரம் நிறுவியுள்ளது.
அர்த்தராத்திரியில் அழைத்த அந்தத் தொலைபேசி அழைப்பு. முதல் குரல் அது றமணி. அவளும் றமணியும் ஒரே ஊரில் பிறந்து சிறுவயது முதல் ஒரே பாடசாலையில் படித்து, 14 வயதில் அவள் 12 வயதால் மூத்த ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டு கிறுக்கு வயதின் கிறுக்குத்தனங்கள் எதையுமே அனுபவிக்காது குடும்பம் என்ற கூட்டுக்குள் சிக்கித்து குடும்பவாழ்வு இனிப்பா , கசப்பா , சுகமா , சுமையா? எப்படியான கேள்விகளுக்கும் ஒரு புன்னகையால் மட்டும் எதையுமே வெளிப்படுத்தாத அவளது சுபாவம். இப்படி நிறைய றமணி பற்றிய ஞாபகங்கள்......
ஏய் உன்னோடை ஒராள் கதைக்கப் போகுதாம் ? யாரது ? அவளது கேள்விக்கு பதில் வரமுன்னம் றமணியின் கையிலிருந்து தொலைபேசி கைமாறி ஆண்குரல் ஒன்று அவளை நலம் விசாரிக்க... குழம்பிப் போகிறாள்.
என்னை ஞாபமிருக்காதெண்டுதான் நினைக்கிறேன்.
இலக்கியத்தை நேசிப்பவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட 'இலக்கியச் சந்திப்பு" அரசியல் கறள் தட்டும் சந்திப்பாகவும் ஆளையாள் குத்தும் சந்திப்பாகவும் ஆனதெப்படி ? இந்தச்சந்திப்புப்பற்றி எழுது முதல் ஒன்றை சொல்லிவிடுகிறேன். இந்த இலக்கியச் சந்திப்பில் நான் ஒரு நாளும் தலைவைச்சும் படுக்கேல்ல. இப்பத்தியை படிக்க நேரும் இலக்கியம் இல்லை அரசியல் கறள்தட்டும் ஆர்வலர்கள் அறுவைகள் விசித்திரங்கள் லச்சுமிகளுக்கெல்லாம் எழும் கேள்விக்கு முதலிலே பதிலை தருவது பொருத்தமாகும் என்பதால் சொல்லியாயிற்று.
'வழி" தமிழீழப் பெண்கள் 13பேரின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாக 2005 ஆவணி வெளியாகியது. இச் சிறுகதைத் தொகுப்பானது 2006 ஏப்ரல் மீள் வெளியீடாகவும் வந்திருக்கிறது. ஏற்கனவே தமிழீழப் பெண்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் 'கப்டன் வானதி வெளியீட்டகத்தினரின் 7வது வெளியீடாக வழி சிறுகதைத் தொகுதி தமிழீழப்பெண் எழுத்தாளர்களினால் மீளவும் ஒரு காத்திரம் மிக்க கனத்தைப் பதிந்துள்ளது. இத்தொகுப்பானது எழுத்தாளர் அமரர் சந்திரா அற்புதலிங்கம் அவர்களுக்குக் காணிக்கையாக சந்திரா அற்புதலிங்கம் அவர்களின் சிறுகதையான வழி சிறுகதையே இந்நூலின் பெயராகவும் ஆகியுள்ளது.
24.11.07 மதியப்பொழுதில் கேட்டகதறல் ஒலி இன்னும் காதுகளில் ஒலித்தபடியேஇருக்கிறது. புலத்தில் வெள்ளையர்களின் சாவு நிகழ்வுகள், தமிழரின் சாவு நிகழ்வுகள் எனஅவ்வப்போது கலந்து கொண்ட சமயங்களில் ஏற்படாத துயரும் தாக்கமும் 24.11.07 அன்றுயேர்மனிய நகரம் ஒன்றில் நடந்த சாவுநிகழ்வில் ஏற்பட்டது.
45வயதில் தனது வாழ்வை முடித்துக் கொண்டஒரு கணவனின் சாவின் பின் தனது வாழ்வை நினைத்து அந்தரித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதியே இப்பத்தியில் பதிவாகிறது.
Recent comments
5 weeks 3 days ago
5 weeks 3 days ago
5 weeks 4 days ago
6 weeks 1 day ago
6 weeks 1 day ago
6 weeks 6 days ago
7 weeks 2 days ago
7 weeks 6 days ago
8 weeks 6 days ago
8 weeks 6 days ago