கொண்டாடும் மனசு ......

கொண்டாடும் மனசு .............

நாம் பிறந்த மண்ணிலே ,
நாள்தோறும் குண்டு மழை
போதாதென்று மழை வெள்ளம்
அழுது ஓடிய கண்ணீர் வெள்ளம் ,
தசை பிளந்து ரத்த வெள்ளம் ,
இத்தனைக்கும் பயந்த சன வெள்ளம்
எங்கு ,ஓடி அடைக்கலம் தேடும்
இவை எல்லாம் நம் சனத்தை
ஆட் கொள்ள ,கொண்டாட மனம் வருமா

பட்டியல் நீளும் ,பாதை போன்று
அப்பாவை காணவில்லை ,
அண்ணாவை காணவில்லை ,
பள்ளி சென்ற அக்காவையும்
காணவில்லை ,தகவல் இல்லை
இந்நிலையில் கொண்டாட மனம் வருமா

தினசரியைபார்த்தால் தினம் தோறும்
இணைய தளத்திலும் துயர செய்தி தான்.
இத்தனையும் நடக்கும் போது
கொண்டாட மனம் வருமா ?
அமைதியின் ஏசுவை ,தரிசிக்க
கோவிலிலும் குண்டு மழை ,
கோவில் சிலை (சொரூபம் )களுக்கும் தான்
இந்நிலையில் கொண்டாட மனம் வருமா

கொண்டாட ஒரு காலம் வரும் ,அது வரை
கொண்ட கொள்கை மாறாமல் ,
புலம் பெயர் ,மண்ணில் உள்ளக்கோவிலில்
இறைவனை ,ஏசு பிறப்பை உள்ளத்தில்
மண்ணில் சமாதானம் வர மன்றாடுவோம் . ,

இந்தக் கருத்து nillamathy அவர்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது: நேற்று, 01:11 AM

--------------------
நட்புடன் நிலாமதி
Go to the top of the pageReport Post

Edit Post

Comments

பிரார்த்தனை என்றாவது பிரச்சனை தீர்க்குமா?

எரிவதை எடுத்தால் கொதிப்பது அடங்கும்,வழிமுறை அங்கு நிச்சயம் உண்டு,ஆயின் நமதான இரங்கலை,வீறாப்பாகமாற்றுவோம்,இழப்பில்லாத,போராட்டமில்லாத,துயரமில்லாத,சோகமேயற்ற,வாழ்வெங்கு கண்டீர்,வரலாறு நமக்கு கைகொடுத்து கூறும் செய்திகள்,அதாவது வரலாற்றில் இழப்பற்ற வெற்றி எங்காவது உதித்தது கண்டோமா?படித்துத்தான் உள்ளோமா?ஒன்றின் இழப்பில்தான் மற்றொன்றின்வாழ்வு,வாழ்வாதாரமேஇதுதான்.ஆகவேசோகங்களைசொந்தம்கொண்டாடாமல்,அதிலிருந்து மீட்சிபெற மானசீக இரங்கலுடன் மாற்றீட்டை யாகிப்போம்,வெல்ல,மலரும் ஈழம்.மன உறுதியை முதலில் உறுதி கொள்வோம்.நயமான நெகிழ்வுடன்.....நன்றியுடனும்ஒன்று மட்டும் எப்போதும் உறுதி தமிழீழ மலர்வின் போது கொண்டாடும் கொண்டாட்டம் தவிர்ந்த எந்த கொண்டாட்டமும் கொண்டு, ஆடும் ஆட்டம் இல்லை.